Wednesday, October 21, 2009
கப்பலில் உலகை சுற்றப் புறப்பட்ட 16 வயது சிறுமி
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஜெஸிகா வாட்சன் (படம்), சிறிய கப்பலில் உலகை சுற்றுவதற்கான தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
சிட்னி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஜெஸிகாவுக்கு அந்நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ஜெஸிகாவின் நண்பர்களும், உறவினர்களும் நேரில் வந்து வாழ்த்துகளை தெரிவித்து அவரை வழியனுப்பி வைத்தனர்.
கடல்வழியாக 8-மாதத்தில் உலகை சுற்றப் புறப்பட்டுள்ள ஜெஸிகாவின் கப்பலைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பாக சிறிய படகுகளில் சிலர் செல்கின்றனர்.
11-வயது முதலே உலகை சுற்ற வேண்டும் என்ற லட்சியக் கனவுகளை சுமந்துள்ள ஜெஸிகா, வெற்றிகரமாகத் தனது பயணத்தை முடித்துவிட்டால் அவரது கனவு நனவாகிவிடும். உலகை கடல் வழியாகச் சுற்றி வந்த முதல் சிறுமி என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துவிடும். அவரது கனவு நனவாகவும், லட்சியம் நிறைவேறவும் நாமும் வாழ்த்துவோமாக!.
Subscribe to:
Post Comments (Atom)


I also pray for her success journey.
ReplyDeleteA.PRABU.