Wednesday, October 21, 2009

14 வயதில் கைதான தமிழ்ச் சிறுவன் 15 வருடங்களாகத் தடுத்து வைப்பு

14 வயதில் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் எவ்வித வழக்கு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படா மல் கடந்த 15 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று சுதந் திரத்திற்கான மக்கள் மேடை எனும் அமைப்பு திடுக்கிடும் தகவல் அறிவித்துள்ளது.



பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசி யற்கைதிகளையும் 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகத் தையும் சந்திப்பதற்கு இந்த அமைப்பு சிறைச் சாலைகளுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தது.



அப்போதே 14 வயதில் சிறுவனாக கைதானவரை 29 வயது இளைஞராக அங்கு சந்தித்தது என அந்த அமைப்பு அறி வித்துள்ளது.

No comments:

Post a Comment